விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை-பஸ், ஆட்டோ, கடைகள் தீவைத்து எரிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் பஸ், ஆட்டோ, கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. திமுக கொடிக் கம்பங்கள், பேனர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்தில் இந்துமுன்னணி சார்பில் 155 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் மார்த்தாண்டம் அருகே உள்ள மிடாலம் கடலில் கரைப்பதற்காக கருங்கல் அருகே கொண்டு வரப்பட்டன.
கடற்கரைக்கு வந்ததும், தங்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை, கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த மீன் பிடி படகுகள் மீது அவற்றை வைத்ததாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் இந்து முன்னணியில் கலவரத்தில் குதித்தனர். உதயமார்த்தாண்டம் சந்திப்புப் பகுதியில், பெரும் வன்முறை மூண்டது.
அப்பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. மீனவர்களின் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு ரேஷன் கடையை நொறுக்கிய கும்பல் அங்கிருந்த அரிசியை எடுத்து சாலையில் வீசியது.
அப்பகுதி வழியாக வந்த அரசு பஸ்ஸையும் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு விட்டு தீவைத்துக் கொளுத்தினர். நிதி நிறுவனம் ஒன்றையும் உடைத்து உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினர். அங்கிருந்த ரூ. 7 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளையும் அபகரித்துக் கொண்டனர்.
நாகர்கோவில் திமுக முப்பெரும் விழாவையொட்டி திமுகவினர் வைத்திருந்த பேனர்கள், திமுக கொடிக் கம்பங்களையும் இந்து முன்னணியினர் வெட்டிச் சாய்த்தனர்.
அப்பகுதியே பெரும் போர்க்களமாக இருந்தது. விநாயகர் சிலைகளுடன் வாகனங்கள் ஆங்காங்கு தேங்கி நின்றுயாரும் நகரக் கூட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கலவரத்தில் போலீஸார் பலரும் காயமடைந்தனர். கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மற்றும் எஸ்.பி.ராஜேந்திரன் விரைந்து வந்து இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் பெருமளவில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications