வேலையில்லா இங்கிலாந்து இளைஞர்களை இந்தியாவிற்கு ஐடி பயிற்சிக்கு அனுப்ப அறிவுரை
அன்மையில் இந்தியாவிற்கு வந்த கேபில் இந்திய பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் வருடாந்திர இரவு விருந்தின் போது இதைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பெங்களூரில் தொழில் நுட்ப ஜாம்பவான் அசிம் பிரோம்ஜியை சந்தித்தபோது அவர் இங்கிலாந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்புவதாகக் கூறினார். இந்த பயிற்சியின் மூலம் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியில் இருக்கும் நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் வந்து வேலை பார்ப்பவர்களுக்கு அரசு வரையறை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
உள்துறை அலுவலகம் விதித்துள்ள இந்த வரையறையால் நாட்டின் பொருளாதார மேம்பாடு ஏற்கனவே பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
இங்லாந்திற்கு பணிபுரிய வரும் இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு ஆண்டு வரையறை விதிப்பது இந்த கூட்டணி அரசின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆனால் இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஏப்ரல் 2011-ம் ஆண்டு வரை 24,100 பேரைத் தான் நியமிக்க வேண்டும் என்ற இந்த கட்டுப்பாட்டால் நிறவனங்கள் வேறு நாடுகளுக்குச் செல்ல வழி வகுக்கிறது என்று அவர் கூறினார்.