''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'': இதுதான் நமது தாரக மந்திரம்-ராமதாஸ்
கும்மிடிப்பூண்டி & சேத்தியாதோப்பு: நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கும்மிடிப்பூண்டியில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நிறைவு நாளில் அவர் பேசுகையில்,
ஆறரை கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னிய இனம க்கள் மேம்பாடு அடையாமல் வாழ்ந்து வருகின்றனர்.
தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி வகை செய்யும்.
சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடுதான்.
வன்னியர்கள் மற்றும் தலித்துகள் இணைந்தால் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால், திராவிடக் கட்சிகள் சூழ்ச்சி செய்து இவ்விரு இனத்தவரிடையே பிரிவினைகளை உருவாக்கி வருகின்றன.
இந்தியாவிலேயே அதிகமான விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணமான டாஸ்மாக் கடைகள் தான்.
பாமக ஆட்சிக்கு வந்தால் அவை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.
''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'':
முன்னதாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் திருமண விழாவில் பேசிய ராமதாஸ்,
வன்னியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள கல்விக் கோவிலில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டக் கல்லூரி துவங்கப்படும். வன்னியர் பிள்ளைகள் அனைவரும் அங்கு படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ்சாக வேண்டும்.
நமது சமுதாய மக்கள் அனைவரும் திருப்பதி, சபரிமலை மற்றும் முருகன் கோவிலுக்கெல்லாம் போகிறீர்கள். வன்னியர்களுக்காக கட்டப்பட்டுள்ள கல்விக் கோவிலுக்கு அனைவரும் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து பார்க்க வேண்டும்.
இந்த சமூகம் வாழ வேண்டும் என்றால், நாம் ஆள வேண்டும்.
இரண்டு கோடி மக்களை வைத்துக் கொண்டு, எனக்கு 40 இடம் கொடுங்கள்; 50 இடம் கொடுங்கள் என, யாரிடமாவது கையேந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
இன்னும் யாரிடம் கையேந்துவது. பல கட்சிகளை வளர்த்து விட்டுக் கொண்டே இருந்தால், நாம் ஆட்சிக்கு வரவே முடியாது. வன்னியர் அனைவரும் என் பின்னால் வாருங்கள். நான் கை காட்டுபவர்களை ஆதரிக்க வேண்டும். இனியும் மனு கொடுக்கும் ஜாதியாக நாம் இருக்கக் கூடாது. மனு வாங்கும் ஜாதியாக வன்னியர்கள் மாற வேண்டும்.
நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டும் என்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications