For Daily Alerts
Just In
அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும் முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும்-தவ்ஹீத் ஜமாஅத்
சேலம்: அயோத்தி நிலம் தொடர்பாக தீர்ப்பு எப்படி இருந்தாலும் முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும் என்று அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையத் இக்பால் நிருபர்களிடம் பேசுகையில்,
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும். இதை பள்ளி வாசல்கள் மூலமும் பிரசாரம் செய்து வருகிறோம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 3ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது என்றார்.
Story first published: Wednesday, September 22, 2010, 11:45 [IST]