மதுரையில் ஜெ. தலைமையில் ஆர்ப்பாட்டம்-பூஜை போட்ட அதிமுகவினர்
மதுரை: மதுரையில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் மேடை போடுவதற்கான பூமி பூஜை இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
அதிமுக சார்பில் கோவை மற்றும் திருச்சியில் திமுக அரசை கண்டித்து நடத்திய ஆர்பாட்ட பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான அதிமுகவினர் குவிந்ததை அடுத்து மதுரையிலும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அதன் தலைமை அறிவித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த ஆர்பாட்டம் தள்ளிப்போனது.
மதுரையில் ஆர்பாட்டம் நடத்தினால் குண்டு வைத்து கொலை செய்வோம் என மிரட்டல் கடிதம் ஜெயலலிதா வீட்டிற்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் சென்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கோரி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் போக்கை கண்டித்து அடுத்த மாதம் 18-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதற்காக மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில், பாண்டி கோவிலுக்கு அருகே 60 ஏக்கர் நிலத்தை அதிமுகவினர் வாடகைக்கு எடு்த்திருக்கின்றனர். அந்த இடத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் பூமி பூஜை நடத்தினர்.
இதில் அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், செங்கோட்டையன், 6 அதிமுக எம்.எல்.ஏக்கள், 6 முன்னாள் எம்.பிக்கள், 9 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், புரட்சித் தலைவி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும். 50 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன என்றார்.
திருச்சி, கோவை ஆர்ப்பாட்டத்தை விட மதுரையில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற மேலிட உத்தரவின்படி ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேர்ப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி












Click it and Unblock the Notifications