மதுரையில் ஜெ. தலைமையில் ஆர்ப்பாட்டம்-பூஜை போட்ட அதிமுகவினர்
மதுரை: மதுரையில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் மேடை போடுவதற்கான பூமி பூஜை இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
அதிமுக சார்பில் கோவை மற்றும் திருச்சியில் திமுக அரசை கண்டித்து நடத்திய ஆர்பாட்ட பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான அதிமுகவினர் குவிந்ததை அடுத்து மதுரையிலும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அதன் தலைமை அறிவித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த ஆர்பாட்டம் தள்ளிப்போனது.
மதுரையில் ஆர்பாட்டம் நடத்தினால் குண்டு வைத்து கொலை செய்வோம் என மிரட்டல் கடிதம் ஜெயலலிதா வீட்டிற்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் சென்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கோரி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் போக்கை கண்டித்து அடுத்த மாதம் 18-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதற்காக மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில், பாண்டி கோவிலுக்கு அருகே 60 ஏக்கர் நிலத்தை அதிமுகவினர் வாடகைக்கு எடு்த்திருக்கின்றனர். அந்த இடத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் பூமி பூஜை நடத்தினர்.
இதில் அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், செங்கோட்டையன், 6 அதிமுக எம்.எல்.ஏக்கள், 6 முன்னாள் எம்.பிக்கள், 9 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், புரட்சித் தலைவி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும். 50 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன என்றார்.
திருச்சி, கோவை ஆர்ப்பாட்டத்தை விட மதுரையில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற மேலிட உத்தரவின்படி ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேர்ப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம்.
-
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications