அயோத்தி: செப். 30க்குள் தீர்ப்பு வராவிட்டால் மீண்டும் முதலிலிருந்து விசாரணை?

அயோத்தி வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் விசாரித்து வந்தது. தீர்ப்பு தயாராக உள்ளது. நாளை அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இன்று அதை செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டது உச்சநீதிமன்றம்.
தற்போது இந்த வழக்கில் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது 3 நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் 1ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனவே செப்டம்பர் 30ம் தேதிக்குள் தீர்ப்பை சொல்லியாக வேண்டும். அப்படி சொல்ல முடியாமல் போனால், இந்த தீர்ப்பை வெளியிட முடியாது. மாறாக புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக, இந்த வழக்கையே மொத்தமாக முதலிலிருந்து விசாரிக்க வேண்டி வரும்.
இப்படி பெரும் சிக்கல் இருப்பதால் அயோத்தி தீர்ப்பே தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதை மனதில் கொண்டுதான் செப்டம்பர் 28ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே அன்று அது இறுதியான உத்தரவை பிறப்பித்தாக வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications