For Daily Alerts
Just In
நாட்டின் உணவுப் பணவீக்கம் 15.46% ஆக உயர்ந்தது
டெல்லி: செப்டம்பர் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பண வீக்கம் 15.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், பால், தானியங்களின் விலை உயர்ந்ததே இதற்குக் காரணம்.
செப்டம்பர் 4ம் தேதியுடனான வாரத்தின்போது உணவுப் பணவீக்கம் 15.10 சதவீதமாக இருந்தது.
கடந்த நான்கு வாரங்களாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தவண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குறிப்பகா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி, இ.பி, அஸ்ஸாம், ராஜஸ்தான் ஆகியவற்றில் கன மழை பெய்ததால் உணவு சப்ளை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் விலை உயர்ந்ததே பண வீக்கமும் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
Story first published: Thursday, September 23, 2010, 17:50 [IST]