கடல் நீரை பெட்ரோலாக்குவேன்-மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை சவால்!

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை பெட்ரோல் தயாரித்திருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதை பல்வேறு ஆய்வாளர்கள் பரிசோதித்தனர், விஞ்ஞானிகளும் பரிசோதித்தனர். இறுதியில் இது பெட்ரோல் இல்லை என்று கூறி விட்டனர். இதன் காரணமாக பிள்ளையின் மூலிகை 'பெட்ரோலுக்கு' காப்புரிமை கிடைக்கவில்லை.
அதன் பின்னர் தனது பார்முலாவை பறிக்க முயற்சி, ஆள் கடத்தல் என பல சர்ச்சைகளில் சிக்கினார் ராமர் பிள்ளை. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமர் பிள்ளை.
அப்போது அவர் கூறுகையில், நான் கண்டுபிடித்த மூலிகை எரிபொருள் உண்மை என்று ஐரோப்பா யூனியனை சேர்ந்த டென்மார்க் அறிவியல் தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தில் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் உற்பத்தி செய்யும் எரிபொருள் பெட்ரோலுக்கு பதிலாக விளங்குகிறது என அங்கீகாரம் வழங்கி உள்ளது.
மேலும் உலக காப்புரிமை அமைப்பு எனது கண்டுபிடிப்பை புதுமையானது என்றும், காப்புரிமை பெற தகுதியானது என்றும் கூறி உள்ளது. எனது எரிபொருள் உற்பத்திக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளேன். விரைவில் காப்புரிமை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நான் பெற்ற இந்த வெற்றியை முதல்வர் கருணாநிதியின் பாதத்தில் சமர்ப்பித்து உலக நாடுகளின் எரிபொருள் பற்றாக்குறையை சரிசெய்வேன்.
ஒரு லிட்டர் எரிபொருள் உற்பத்தி செய்ய 5 ரூபாய் மட்டுமே செலவாகிறது. நான் தற்போது அமோனியம் குளோரைடு மற்றும் பிரக்டோஸ், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து எரிபொருள் தயாரிக்கிறேன். இது ஒரு முறை. இதுபோல 10 முறைகள் உள்ளன. சிட்ரிக் அமிலத்திற்கு எலுமிச்சம் பழச்சாற்றை பயன்படுத்துகிறேன்.
அக்டோபர் 2-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல்நீரை எடுத்து பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக மாற்றிக்காட்டுவேன்.
சிலர் மிரட்டி என்னுடைய காப்புரிமையை கைப்பற்ற தீய எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் யார் என்று எழுத்து மூலம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுக்க உள்ளேன் என்றார் ராமர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications