இன்றைக்குள் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும்-கல்மாடி
டெல்லி: இன்றைக்குள் காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்துப் போட்டிகளும் சரி செய்யப்பட்டு விடும் என்று போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார்.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னும் சில நாட்களில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கவுள்ளது. நேற்று முதல் வீரர், வீராங்கனைகள் கேம்ஸ் வில்லேஜில் குடி புகத் தொடங்கினர். முதல் அணியாக இந்திய அணி நேற்று வில்லேஜுக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், இன்றைக்குள் அனைத்துப் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு விடும் என்று கூறியுள்ளார் கல்மாடி. இதுகுறித்து அவர்கூறுகையில், வில்லேஜில் இடம் பெற்றுள்ள அனைத்து அபார்ட்மென்ட்களும் சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன.
இதனால் எந்த அணியும் போட்டியிலிருந்து விலக வாய்ப்பே இல்லை. அனைவரும் பங்கு பெறுவார்கள்.
போட்டிக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள குறைகளுக்கு என்னை குறை கூறி வரும் கடுமையான விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை. போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதே எனது முதல் கவனமாக உள்ளது என்றார் கல்மாடி.












Click it and Unblock the Notifications