மகனை டிரெய்னி அரசியல்வாதியாக களம் இறக்கினார் லாலு பிரசாத் யாதவ்
மகனை பாட்னாவில் வைத்து செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்திய லாலு தனது பாணியில் பேசினார்.
இங்கே பாருங்கள், இவர்தான் தேஜஸ்வீ. எனக்கும், எனது மனைவி ராப்ரிக்கும் உதவியாக இருந்தார். அரசியலில் பயிற்சி எடுத்து வருகிறார். முழு நேர அரசியலில் இனி ஈடுபடுவார் என்றார்.
இவரை டிரெய்னி அரசியல்வாதியாக கருதுங்கள். என்னுடன் தொடர்ந்து வருவார். அரசியலை கற்றுக் கொள்வார் என்றார்.
லாலு இப்படிக் கூறியபோது, சின்ன லாலு கும்பிட்ட கைகளும், குப்பென்று மலர்ந்த புன்னகை முகமுமாக அடக்கமாக உட்கார்ந்திருந்தார்.
தொடர்ந்து லாலு பேசுகையில், அவருடைய அரசியல் பின்னணியின் உதவியால் ஓஹோவென உயர்ந்து வருவார் என்றும் கூறி முடித்தார் லாலு.
பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வியை களம் இறக்கவுள்ளார் லாலு. ஒருவேளை லாலு கட்சி ஆட்சியைப் பிடித்தால் தேஜஸ்வி முதல்வராவாரா என்று தெரியவில்லை.
ஆனாலும் ஆகலாம் !