விஷம் குடித்து மயங்கி கிடந்த காதலன் அருகே பிளஸ்-1 மாணவி பிணம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காதலன் அருகே, பிளஸ்-1 மாணவி காயங்களுடன் மாணவி பிணமாக கிடந்தார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

விழுப்புரம் அருகே உள்ள சின்னசேலத்தையடுத்து உலகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா (16) பிளஸ்-1 படித்து வந்தார்.

அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி இளையராஜாவுக்கும் (20) பிரியங்காவுக்கும் காதல் ஏற்பட்டது.

இந் நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரியங்கா வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் வரதப்பனூர் ஆற்றங்கரை பகுதி வயலில் பிரியங்காவும், இளையராஜாவும் மயங்கிக் கிடப்பதாக தகவல் வந்தது.

பிரியங்கா கழுத்தில் காயங்களுடன் உடைகள் கலைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அருகே இளையராஜா, விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

சின்னசேலம் போலீஸார் இளையராஜாவை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைவிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த பிரியங்காவின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனது மகள் கழுத்தில் காயங்கள் உள்ளதால் சாவில் மர்மம் இருப்பதாக பிரியங்காவின் தந்தை சங்கர், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ந்து மயக்கத்தில் உள்ள இளையராஜாவுக்கு நினைவு திரும்பிய பின் விசாரணை நடத்தினால்தான் நடந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+