விடுதி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை-போதகர், மகன் கைது-ஒருவருக்கு வலைவீச்சு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ போதகர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகரில் உள்ள தோட்டத்தில் கிறிஸ்தவ ஜெபகூடம் மற்றும் அனாதை விடுதி உள்ளது. இதை அன்புநகரைச் சேர்ந்த போதகர் சவுந்திர ராஜன் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தர்மபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் தங்கி அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். மொத்தம் 12 மாணவிகள், 22 மாணவர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பாலியல் தொல்லை குறித்து அவரது தந்தையிடம் கூறவே அவர் சென்ற வாரம் தனது மகளை விடுதியில் இருந்து அழைத்து சென்றுவிட்டார். இது குறித்த தகவல் தட்டார்மடம் போலீசுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. அந்த விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தியபோது முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ், வருவாய் ஆய்வாளர் விஜய குமாரி, வி.ஏ.ஓ. வேல்சுந்தரம் ஆகியோர் மணி நகரில் உள்ள அந்த விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகள் பலர் விடுதியில் நடந்தவற்றை கூறி அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதனையடுத்து அங்கு தங்கி படித்து வந்த 12 மாணவிகள், 22 மாணவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு நேற்று மாற்றப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விடுதி காப்பாளர் சவுந்திர ராஜன், அவரது மகன் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுந்திராஜனின் இன்னொரு மகன் உதய பாலஜெயசி்ங்கை தேடி வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications