தேவேகவுடா ஆதரவு யாருக்கு? விரைவில் முடிவு
அதன்படி ஜனதா தளம் (எஸ்) கட்சி யாருடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளது என்பதை விரைவில் அறிவிப்பதாக அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவை வந்த மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் கட்சியின் தலைவர் தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது,
இன்று ஊட்டியில் நடக்கும் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். கர்நாடகாவில் ஆளும் பாஜக ஊழலில் சிக்கித் தவிக்கிறது. கர்நாடகாவின் 65 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் மக்கள் இது போன்ற ஊழல் அரசை பார்த்திருக்கவே முடியாது.
தமிழகத்தில் கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். தற்போது யாருடன் கூட்டணி வைப்பது என்று இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவின் அரசியல் தற்போது நிலையில்லாததாகிவிட்டது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்கவோ, சொல்லவோ முடியாத நிலை உள்ளது, என்று அவர் கூறினார்.