மு.க. அழகிரி, முதல்வர் கருணாநிதி மீது ஜனாதிபதியிடம் அதிமுக பிரமுகர் மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக மாநில தொழிற் சங்கத் துணை செயலாளர் பசும்பொன்பாண்டியனின் மனைவி ஜெயலட்சுமி குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலுக்கு தந்தி மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த தந்தி மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனது கணவர் பசும்பொன்பாண்டியன் அதிமுக கட்சியில் மாநில தொழிற் சங்கத் துணை செயலாளர்ராக உள்ளார்.

அவர் கடந்த வாரம் ஜெயா டிவி-யில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்குத் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டினார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு திமுக பிரமுகர் முத்துப்பாண்டி பெயரில் என் கணவர் தான் கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறி எனது கணவர் மீது மதுரை கரிமேடு போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுத்து மதுரை தொகுதியில் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்தார் என்றும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

எனது கணவர் பசும்பொன்பாண்டியனை கொலை செய்யும் நோக்ககோடு குண்டர்களையும் ஏவி விட்டுள்ளனர். எனவே, அவர் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிப்பட்டிருந்தது.

இதே போன்ற புகாரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+