For Daily Alerts
Just In
பீகாரில் 47 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
பாட்னா: பீகாரில் நடைபெறவுள்ள 6 கட்ட சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
பீகாரில் அக்டோபர் 21ம் தேதிமுதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் அங்கு 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று காலை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 47 தொகுதிளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 4ம் தேதியாகும். மனுக்கள் 5ம் தேதி பரிசீலிக்கப்படும். 7ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம்.
Comments
Story first published: Monday, September 27, 2010, 17:03 [IST]