இன்னும் வெடிக்கும்...! - இலங்கைக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
கொழும்பு: கிழக்கு இலங்கையில் கரடியனாறு காவல் நிலையத்தில் வெடிமருந்துகள் வெடித்து 27 பேரைப் பலி வாங்கியதைப் போன்ற சம்பவங்கள் மேலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குள் அரசு விழிப்படைந்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளை அகற்றுவதுதான் பாதுகாப்பானது, என்று வெடிமருந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் சமீபத்தில் கரடியனாறு என்ற இடத்தில் உள்ள காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிர்பாராதவிதமாக வெடித்தன. இதில் 27 போலீசார் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர். இவர்கள் வபோலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் என்று கூறப்படுகிறது. சாலை கட்டுமான பணிகளுக்காக சீன நிறுவனம் ஒன்றால், காவல்நிலையத்தில் இந்த வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரியும் வெடிகுண்டு நிபுணருமான ஒருவர் கூறியதாக பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், "இலங்கையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத காவல் நிலையங்களில் உள்ள வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில்தான் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு லட்சம் கிலோ வெடிபொருட்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போன்ற, மேலும் பல வெடிவிபத்துகள் எதிர்காலத்தில் நிகழும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்க்க, காவல் நிலையங்களில் உள்ள வெடிபொருட்களை, சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றுவதே சிறந்தது. இலங்கை அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டினால், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் நடக்கலாம்", என்று எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications