சங்கரராமன் கொலை வழக்கு-5 பேர் மட்டுமே ஆஜர்-அக்.21க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு இன்று புதுச்சேரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் மட்டுமே ஆஜரானார்கள். இதையடுத்து வழக்கு அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காஞ்சிரபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதுவரை 95 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இவர்களில் 52 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி வழக்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று வழக்கு கோர்ட்டில் வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரில் ஐந்தே ஐந்து பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications