செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை மாற்றம்: பொது மேலாளர் இன்று ஆய்வு
தென்மலை: செங்கோட்டை, புனலூர் மீட்டர் கேஜ் பாதை மாற்றம் தொடர்பான ஆய்வுப் பணிகளை இன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் மேற்கொள்கிறார்.
செங்கோட்டை-புனலூர் இடையே 49.9 கிமீ மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு தென்னக ரயில்வே ரூ.389 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த பாதையில் ஓடிக் கொண்டிருந்த 106 ஆண்டு கால மீட்டர்கேஜ் பயணிகள் ரயில் கடந்த 19-ம் தேதியுடன் தனது ஓட்டத்தை நிறுத்தியது. இந்த தடத்தில் துரிதமாக வேலையை தொடங்குவதற்கு ஒப்பந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த ரயில் பாதையை ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் தீபக் கிஷான் இன்று தனி ரயில் மூலம் காலை 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு 4 மணிக்கு வருகிறார்.
பின்னர் செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை மற்றும் 5 பெரிய பாலங்கள், 5 குகைகள், 120 சிறிய பாலங்கள் போன்றவைகளை தனி ரயில் மூலம் சென்று ஆய்வு செய்கிறார். இதற்காக செங்கோட்டை-புனலூர் இடையே உள்ள பாதைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications