'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை

தமிழகத்தில் பதற்றமான பகுதிகளாக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, ஓசூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பதற்றம் தணியும் வரை மாநிலம் முழுவதும் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை 61 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு கூறுகிறது.
இது குறித்து சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் முழு அளவில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் அனைத்து மண்டல ஐ.ஜிக்களுக்கும், அனைத்து சரக டி.ஐ.ஜிக்களுக்கும், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும், அந்த மாவட்ட மதத் தலைவர்களை அழைத்து பேசியுள்ளனர். தமிழகத்தில் அமைதி நிலவ முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று மதத் தலைவர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பதற்றமான பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளான கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, ஓசூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். டி.ஜி.பியின் கட்டுப்பாட்டில் உள்ள 10,000 சிறப்புப் படை போலீசார் பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
வன்முறையில் ஈடுபட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. அதுபோல, இந்த பிரச்சனையும் எளிதில் சமாளிக்கப்படும். பதற்றம் தணியும் வரை ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் முழு அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்றார்.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications