அயோத்தி தீர்ப்பு: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத விடுமுறை!
சென்னை: அயோத்தி தீர்ப்பையொட்டி, இன்று கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத விடுமுறை தினமாகக் காட்சியளித்தது தமிழகத்தில்.
ஏற்கெனவே காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்ததால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. எஸ்எஸ்எல்சி மற்றும் ப்ளஸ் டூ ரிசல்ட் வெறியில் காலாண்டுத் தேர்வு விடுமுறையைக் கூட ரத்து செய்திருந்த சில தனியார் பள்ளிகளும் இன்று மூடப்பட்டுவிட்டன.
அரசு அலுவலகப் பணிகளுக்குச் சென்றவர்கள் பெரும்பாலும் பிற்பகலிலேயே வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.
சென்னை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் பிற்பகலிலிருந்தே சாலைகள் வெறிச்சோடின. சென்னையில் மூன்று மணிக்கு மேல் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. வியாழன்கிழமை காலையிலிருந்தே லாரிகள் நிறுத்தப்பட்டன. ஆட்டோ, கார்கள் போன்ற வாகனங்களும் பிற்பகலில் நிறுத்தப்பட்டன.
திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தலைகளே காட்சியளித்தன.
கோவையில் முன்னெப்போதும் பார்த்திராத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தன. பேருந்து, ரயில் நிலையங்கள் கிட்டத்தட்ட சீல் வைக்கப்பட்டன. அனைவருமே பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.












Click it and Unblock the Notifications