For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை, நாகர்கோவில், செங்கோட்டைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்

By Chakra
Google Oneindia Tamil News

Train
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நாகர்கோவில், செங்கோட்டை, மதுரைக்கு கூடுதலாக மேலும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டதால் தற்போது கூடுதலாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில் (எண்-0617) எழும்பூரில் இருந்து நவம்பர் 4ம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (5ம் தேதி) காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவில்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்-0618), நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (6ம் தேதி) அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் (எண்-0609) எழும்பூரில் இருந்து 6ம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (7ம் தேதி) காலை 10.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு ரயில் (எண்-0610) செங்கோட்டையிலிருந்து நவம்பர் 7ம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (8ம் தேதி) காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த இரு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், , சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில், கடைய நல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும்.

மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்-0606 ஏ) மதுரையிலிருந்து நவம்பர் 3ம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (4ம தேதி) அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன் பதிவு இன்று முதல் தொடங்கியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X