ஏன் உங்களது ஜாமீனை ரத்து செய்யக் கூடாது-ராஜுவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

ராஜுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏன் உங்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
ரூ. 14,000 கோடி சத்யம் மோசடியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போலீஸில் சரணடைந்தார் ராஜு. பின்னர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை ஜாமீனில் விடுதலை செய்ததும் சிபிஐ பெரும் சர்ச்சைக்குள்ளானது.












Click it and Unblock the Notifications