For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்காதலுக்கு இடையூறு-கணவன் நாக்கை அறுத்த மனைவி கைது!

Google Oneindia Tamil News

கடவூர்: கள்ளகாதலுக்கு தொல்லையாக இருந்த கணவன் நாக்கை அறுத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியாயி (35). இவர்களுக்கு இரணடு பெண் மற்றும் ஒரு ஆண் உள்ளனர்.

இந்த நிலையில், மாரியாயிக்கும், களத்துப்பட்டியை சேர்ந்த நல்லசாமி என்பவருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது.

நல்லசாமிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கர்நாடகாவில் போர்வெல் வண்டி ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

அடிக்கடி களத்துப்பட்டிக்கு வரும் நல்லசாமி மாரியாயியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, தனது மனைவி மாரியாயியை பொன்னுச்சாமி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தார் மாரியாயி. இந்த நிலையில், பொன்னுச்சாமி இரவு வீட்டுக்கு வந்த போது, நல்லசாமியும், மாரியாயியும் உரையாடிக் கொண்டிருந்தனர். நல்லசாமியுடன் இருந்த நேரம் பார்த்து பொன்னுச்சாமி வந்து விட்டதால் கடுப்பானார் மாரியாயி. ஆத்திரமடைந்த அவர், பொன்னுச்சாமியின் நாக்கை இழுத்து பலமாக கடித்துள்ளார். அத்தோடு வெறி அடங்காமல், பிளேடால் அறுத்து விட்டார்.

படுகாயமடைந்து துடித்த பொன்னுச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதையடுத்து பொன்னுச்சாமியின் தம்பி நாகராஜ் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாரியாயி, அவரது கள்ளக்காதலர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X