சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

Subscribe to Oneindia Tamil

Robert Edwards
ஸ்டாக்ஹோம்: இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத கோடானு கோடி பேருக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ள சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ், மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெறுகிறார்.

இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் ஐவிஎப் முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை என்கிறோம். இந்த முறையை பயன்படுத்தி உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் பிறந்தது. அக்குழந்தைக்கு லூயிஸ் பிரவுன் என பெயரிடப்பட்டது.

இந்த மிகப் பெரிய கண்டுபிடிப்பின் பின்னணியில் இருந்தவர் ராபர்ட் எட்வர்ட்ஸ். இன்று கோடானு கோடி பேருக்கு இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை மிகப் பெரிய வரப் பிரசாதமாக உள்ளது. 1978ம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து விட்டன. இன்று ஐந்தில் ஒருவருக்கு வெற்றிகரமாக குழந்தை கிடைக்கும் என்ற நிலைக்கு சோதனைக் குழாய் குழந்தை முறை முன்னேறியுள்ளது.

தற்போது 85 வயதாகும் ராபர்ட்எட்வர்ட்ஸ் மனித குலத்துக்குப் பெரும் வரமாக அமைந்துள்ள சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் ராபர்ட்.

50களிலேயே சோதனைக் குழாய் குழந்தை முறை தொடர்பான ஆய்வுகளை தொடங்கினார் ராபர்ட். பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தனுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம்.

ராபர்ட்டுடன் சேர்ந்து இந்த ஆய்வு மற்றும் கருத்தரிப்பில் ஈடுபட்டவர் பாட்ரிக் ஸ்டெப்டோ. இவர் 1988ம் ஆண்டு இறந்து விட்டார்.

உலகம் முழுவதும் மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாத சூழ்நிலை ஆகியவற்றால் பெரும் பாதிப்பை சந்திக்கும் மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு என நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் துரதிர்ஷ்டம்

உலகின் 2வது சோதனைக் குழாய் குழந்தை இந்தியாவின் கொல்கத்தாவில் அதே 1978ம் ஆண்டு பிறந்தது. இதை நமது நாட்டு விஞ்ஞானியான டாக்டர் சுபாஷ் முகோபாத்யாயா உருவாக்கி சாதனை படைத்தார்.

ஆனால் இதை போலியானது என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் ஒரே வார்த்தையில் கூறி விட்டனர். இதனால் மனம் உடைந்த டாக்டர் முகோபாத்யாயா 1981ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் டாக்டர் சுபாஷின் இந்த சோதனைக் குழாய் குழந்தை சரியான முறையில், உருவாக்கப்பட்டதுதான் என்று பின்னர் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+