பெங்களூர் பிபிஓ ஊழியை பிரதீபா கற்பழிப்பு-கொலை வழக்கு-குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சில தினங்களுக்கு முன்புதான் சிவக்குமார் குற்றவாளி என பெங்களூர் கோர்ட் அறிவித்திருந்தது. இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பரம் மாதம் இரவுப் பணியை முடித்து விட்டு பிரதீபா, தனது நிறுவனம் வழங்கிய வாடகை காரில் வீட்டுக்குப் பயணித்தார். ஆனால் அந்த காரை செலுத்தி சிவக்குமார், பிரதீபாவை கடத்திச் சென்று கற்பழித்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலை பெங்களூர் புறநகர்ப் பகுதியில் போட்டு விட்டுத் தப்பினார். அடுத்த நாள் உடல் கைப்பற்றப்பட்டது. பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் சிவக்குமார் சிக்கினார்.
பிரதீபாவின் கொலை நாடு முழுவதும் பிபிஓ நிறுவனங்களிப் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறிகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. பிரதீபா மரணத்தைத் தொடர்நதே பிபிஓ மற்றும் பிற கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க காரணமாக இருந்தது.
விரைவு நீதிமன்ற நீதிபதி சிவக்குமாருக்கு தண்டனை விதித்ததும், அதைக் கேட்டு கோர்ட்டில் இருந்த பிரதீபாவின் 80 வயது தாயார் கெளரம்மா கதறி அழுதார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கயவனுக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனை எனது மகளின் ஆன்மாவை சாந்திப்படுத்தினால் போதும்.
எனது மகள் இறந்த நாள் முதல் எனக்கு அமைதி இல்லை. ஒரு நாள் கூட அவளை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை. எனது மகளே போய் விட்டாள், எனக்கு எப்படி அமைதி கிடைக்கும்.
யாருக்கும் தீங்கு நினைக்காதவள் எனது மகள். தனது மரணத்திலும் கூட நல்லதைத்தான் செய்துள்ளாள். அவளது மரணத்திற்குப் பிறகுதான் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது. அது எனக்கு மன நிறைவைத் தருகிறது என்றார் கெளரம்மா.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications