பங்குச் சந்தையிலிருந்து விலகுகிறது நிர்மா!!
தங்களின் வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய தயாரிப்புகளில் இறங்கும் முயற்சிகளுக்கு பங்குதாரர்கள் தடையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த பங்கு விலக்க முடிவுக்கு வந்திருப்பதாக நிர்மா தெரிவித்துள்ளது.
சிமெண்ட், மருந்து தயாரிப்பு என தனது எல்லைகளை விஸ்தரித்து வருகிறது நிர்மா. ஆனால் இது அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரி்கிறது.
எனவே விருப்பமில்லாமல் இந்த நிறுவனப் பங்குகளை வைத்திருக்க வேண்டாம் என்பதால், அனைத்துப் பங்குகளையும் நிறுவனத்தின் புரமோட்டர்களே வாங்கிக் கொள்ள முடிவு செய்து, அது குறித்து செபிக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு ஒன்றுக்கு ரூ 235 வீதம் வழங்கி, வெளியில் உள்ள 3.63 கோடி நேர்மைப் பங்குகளை வாங்கிக் கொள்வதாக நிர்மா அறிவித்துள்ளது.
1984-ம் ஆண்டு குஜராத்தில் துவங்கப்பட்ட நிர்மா நிறுவனம், நடப்பு ஆண்டில் மட்டும் ரூ 4620 கோடியை ஈட்டியுள்ளது. இதில் நிகர லாபம் மட்டும் ரூ 249 கோடி.