For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக 39வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெ. மாலை அணிவிக்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக 39வது ஆண்டு விழாவையொட்டி அக்டோபர் 17ம் தேதி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருகை தருகிறார் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி வருகிற 17-ம் தேதி 39-வது ஆண்டு தொடங்குகிறது.

இதை கொண்டாடும் வகையில் 17-ந்தேதி காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

பின்னர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு இனிப்பு வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை உள்பட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த நிர்வாகி களும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கழக உடன் பிறப்புகளும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X