மகாத்மாவுக்குப் பிறகு சோனியாதான் பிரதமர் பதவியை உதறியவர்-திருநாவுக்கரசர்

திருச்சியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியில் என்னோடு இணைய வந்து உள்ள ஆதரவாளர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற ஆண்டு சோனியாகாந்தி ஆசியோடும், இந்த நாட்டின் அடுத்து பிரதமராகும் தகுதியுடைய ராகுல்காந்தியின் ஆசியோடும் காங்கிரசில் இணைந்தேன். இணையும் போது நான் வைத்த ஒரே வேண்டுகோள். இணைப்பு விழாவுக்கு வருகை தர வேண்டும்.
காங்கிரஸ் வரலாற்றில் மகாத்மா காந்திக்கு பிறகு பிரதமர் பதவியை வேண்டாம் என்று ஒதுக்கியவர் சோனியா காந்தி மட்டும் தான். காங்கிரஸ் மேலும், மேலும் வளர்ந்து வருகிறது. மகிழ்ச்சியோடு 125-வது ஆண்டு விழா கொண்டாடுகிறோம்.
தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் ஒரே தலைவர் சோனியா காந்திக்கு பாராட்டு விழா, அடுத்த தனது ரத்தத்தை சிந்தி, இந்த பூமியை ரத்த பூமியாக மாற்றிய தியாக தலைவர் ராஜீவ்காந்தி பிறந்த தினவிழா, இதில் 4-வது விழாவாக நான் காங்கிரசில் இணையும் விழா ஆகிய விழாக்கள் நடக்கிறது.
1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. பிற கட்சியாக இருந்தால் காணாமல் போய் இருக்கும். எதிர்காலத்தில் சோனியாவுக்கு முன்னால் சபதம் ஏற்போம். ராஜீவ்காந்தி ரத்த சிந்திய பூமியில் இருந்து சபதம் ஏற்போம். வருகிற தேர்தலில் கூட்டணி. அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றார் திருநாவுக்கரசு.
மகாத்மா காந்திக்குப் பிறகு பிரதமர் பதவியை வேண்டாம் என உதறியவர் சோனியா காந்திதான் என்று கூறியுள்ளார் திருநாவுக்கரசு. ஆனால் பெருந்தலைவர் காமராஜர் கூட தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டவர் என்று நமக்கு ஞாபகம்.












Click it and Unblock the Notifications