அரசை டிஸ்மிஸ் செய்ய கோரி அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

Karnataka Rajbhavan
பெங்களூர்: எதியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றி செல்லாது என்றும், இந்த அரசை கலைக்க வேண்டும் என்று கோரியும் அதிருப்தியாளர்கள் கர்நாடக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

பெரும் ரகளைக்கு மத்தியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என, மதசார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை தெரிவித்துள்ளன.

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, சபாநாயகர் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பு முறையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கர்நாடக சட்டமன்றம் இதுவரை காணாத பெரும் அமளி, ரகளைக்கு மத்தியில்தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பு முடிவை ஒப்புக்கொள்ளாத அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர், ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இதன் காரணமாக, மத்திய அரசு தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் நடந்துள்ள கலவரம் வரலாறு காணாத ஒன்று. எனவே உடனடியாக ஆளுநரிடம் அறிக்கை பெற்று எதியூரப்பா அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+