தமிழகத்தில் 75 தொகுதிளில் வேட்பாளர்கள் தயார் ! - சொல்கிறார் கரு. நாகராஜன் !
உசிலம்பட்டி : வரும் சட்ட மன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயராக உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் , சமத்துவ மக்கள் கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சத்துவ மக்கள் கட்சி பொது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 18 ம் தேதி தூத்துக்குடியில் நடந்த முப்பெரும் விழா மூலம் தொண்டர்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அடுத்து, அக்டோபர் மாதம் 24 ம் தேதி வள்ளியூர் திருவள்ளூவர் திடலில் பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் தலைவர் சரத்குமார் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து ஆலங்குளம், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதனால் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிற சக்தி எங்களுக்கு உள்ளது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இது வரை முடிவு செய்யவில்லை.
இருப்பினும், கூட்டணி குறித்து முக்கிய முடிவு விரைவில் வெளியிட்டப்படும். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. தற்போது, 75 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஆலங்குளம், குமரி, தூத்துக்குடியில் தலைவர் சரத்குமார் போட்டியிட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போட்டியிடும் தொகுதி முடிவு செய்யவில்லை, என்றார் நாகராஜன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications