14 கிலோ கஞ்சாவுடன் பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வீட்டில் 14 கிலோ கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார். இதன் மதிப்பு ரூ.2.8 லட்சம்.

சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயகுமார், உதவி கமிஷனர் கஜேந்திரகுமார், இன்ஸ்பெக்டர் நாகநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சேகர் ஆகியோர் குன்றத்தூர் திருமுடிவாக்கம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த காளியம்மாள் (43) என்ற பெண் தாதாவின் வீட்டை சோதனையிட்டனர்.

அங்கு 14 கிலோ கஞ்சா மூட்டைகள் சிக்கின. இதன் மதிப்பு ரூ.2.8 லட்சம்.

இதையடுத்து காளியம்மாள் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது மீது போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஏராளமான வழக்குகள் உள்ளன. சேலையூர் போலீஸ் நிலையத்தில் மட்டும் 5 வழக்குகள் உள்ளன.

இந்த கஞ்சாவை தேனி மாவட்டத்தில் இருந்து காளியம்மாள் கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+