For Quick Alerts
For Daily Alerts
Just In
2 இந்தியர்கள் கொலை: தாலிபான்கள் அறிவிப்பு-இந்திய தூதரகரம் மறுப்பு
இஸ்லாமாபாத்: தாங்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். தாலிபான் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குனார் மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப் படை தளம், இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலகம் ஆகியவற்றை தாக்கினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்று தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் இவ்வாறு கூற இந்திய தூதரகமோ இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும், எந்த இந்தியர்களும் உயிர் இழக்கவில்லை என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
Story first published: Tuesday, October 12, 2010, 11:31 [IST]