தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை ராஜாவை வைத்திருக்க திமுக கோரிக்கை?

ரூ. 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜா மீது சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ராஜாவுக்கு சாதகமாக இருக்காது என்று கருதப்படுகிறது.
இந்த வழக்கில் அக்டோபர் 22ம் தேதி விசாரணை வருகிறது. அப்போது மத்திய அரசு உறுதியான பதிலைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜா மீது இப்போதைக்கு குறிப்பாக தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைமையையும், மத்திய அரசையும் திமுக வலியுறுத்தியிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாத கால விசாரணை நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது சிபிஐ. இது திமுக ஆதரவு நிலையாக பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென அது 6 மாத கால நீட்டிப்பைக் கோரியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications