ஈரோட்டில் பாஜக-வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் திடீர் சாலை மறியல்
ஈரோடு: பா.ஜ.க -வினரை கண்டித்து ஈரோட்டில் இளைஞர் காங்கிரசார் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சிமி இயக்கத்துடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கண்டித்து ஈரோட்டில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அவர்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்ச்சனம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் ஈரோடு பாராளுமன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ்ராஜப்பா,மேற்கு தொகுதி தலைவர் கிருபாகரன், வக்கீல் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி அர்சத், செந்தாமரைசதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனே கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications