மெர்க்கன்டைல் வங்கியில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ராயல் சேமிப்பு திட்டம் அறிமுகம்

இது குறித்து வங்கியின் வணிக வளர்ச்சித் துறை பொது மேலாளர் செல்வன் ராஜதுறை விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய சேமிப்பு திட்டமான டிஎம்பி ராயல் சேமிப்புத் திட்டத்தை துவக்கி உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் வங்கியின் இயக்குனர் ராஜகுமார், விக்ரமன், அரவிந்த் குமார், மகேந்திரவேல், ஏசுதாசன், சுந்தர் மற்றும் ராஜன் ஆகியோர் முன்னிலையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெசுதாசன் புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
டிஎம்பி ராயல் சேமிப்பு திட்டம் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் அம்சங்கள் வருமாறு,
குறைந்தபட்ச மாத இருப்பு தொகை ரூ.50 ஆயிரம். இலவச டிஎம்பி ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் விசா, டெபிட் கார்டு சேவை, இலவச இணைய தள வங்கி சேவை, தங்கள் பெயரில் அச்சடிக்கப்பட்ட காசோலை புத்தகம், (இந்த கணக்கில் உபயோகப்படுத்தும் காசோலை புத்தகம் அனைத்தும் இலவசம்) இலவச கிரேடிட் கார்டு, இலவச தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 3 லட்சம் உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications