பீகார் கோவிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பங்கா (பீகார்): பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள துர்க்கை கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நடந்த நவராத்திரி விழாவின்போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர்.
தில்திஹா கிராமத்தில் இந்தக் கோவில் உள்ளது. அங்கு நேற்று நவராத்திரியை முன்னிட்டு 50,000 பக்தர்கள் திரண்டனர். ஆடுகளைப் பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். அப்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இதுவரை 16 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதேஷ் சிதர்மரே கூறினார்.
ஆடுகளைப் பலியிடும் இடத்தின் கட்டட மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததால் பக்தர்கள் பதட்டமடைந்து அங்குமிங்கும் ஓடவே கூட்ட நெரிசல் ஏற்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications