ஓசூரில் ஆளில்லா விமானம் வெற்றிகரமாக பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: டிஆர்டிஓவுக்குச் சொந்தமான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் அமைப்பு வடிவமைத்து உருவாக்கியுள்ள ஆளில்லாத விமானமான ருஸ்தம்-1 நேற்று ஓசூரில் வைத்து வெற்றிகரமாக செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது.
ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் விமான தளத்தில் இந்த பரிசோதனை நடைபெற்றது.
பரிசோதனையின்போது வானிலை சரியில்லாத போதிலும், திட்டமிட்டபடி விமானம் செலுத்தப்பட்டது. வானில் கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறங்கியது.
பரிசோதனைக்கான அனைத்து நோக்கங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications