திண்டிவனம் அருகே போக்குவரத்து ஏட்டுக்கு அரிவாள் வெட்டு : 11 பவுன் நகை வழிப்பறி
திண்டிவனம் : திண்டிவனம் அருகே போக்குவரத்து போலீஸ் ஏட்டு கருணாகரன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
திண்டிவனம் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் கருணாகரன். இவர் தனது மனைவி சசிகலா மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்தில் இருந்து கொஞ்சிபாக்கத்துக்கு சென்றார்.
அப்போது அவரைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கருணாகரனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, அவரைது தலையில் அரிவாளால் வெட்டினர். பின்னர் கருணாகரனின் மனைவி சசிகலா அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு மினனல் வேக்தில் தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருணாகரனை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் ஏட்டு கருணாகரனை வெட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications