காமன்வெல்த் போட்டி ஊழல்... 25 இடங்களில் ரெய்டு!

காமன்வெல்த் போட்டிக்காக ஸ்டேடியங்கள் கட்டியது, ஸ்டேடியங்களை புதுப்பித்தது, போட்டி உபகரணங்கள் வாங்கியது, போட்டி ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, போட்டி ஜோதி நடத்தப்பட்டது உள்பட அனைத்து ஏற்பாடுகளிலும் ஊழல் நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மத்தியத் தணிக்கைக் குழு, ஊழல் ஒழிப்புத்துறை, வருமான வரி துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் போட்டி அமைப்புக் குழுவினர் கையாண்டு வந்த பைல்களை வாங்கி ஆய்வு செய்தனர். தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகி றார்கள். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இதே பாணியில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி வேட்டையைத் தொடங்கினார்கள். டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதிகளில் 25 இடங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ஒப்பந்தம் வகையிலும் எவ்வளவு கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்ற தகவல்களையும் சேகரித்தனர். இது குறித்து எந்தவித தகவல்களையும் வெளியிட வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்ட 25 இடங்களில் பெரும்பாலானவை ஒப்பந்தக்காரர்களின் அலுவலகங்களாகும்.
சோதனைக்குள்ளான ஒப்பந்தக்காரர்களில் டெல்லி பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுதன்ஸ் மிட்டலும் ஒருவராவார்.
இவரும், இவரது உறவினர்களும்தான் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் காண்டிராக்டுகளை பெருமளவில் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மத்திய தணிக்கைத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த விசார ணைக் காகவே 100 பேர் கொண்ட அதிகாரிகள் படையை மத்திய கணக்கு தணிக்கைத் துறை உருவாக்கி இருக்கிறது.
இவர்கள் காமன்வெல்த் போட்டி நடந்த ஸ்டேடியங் கள், விளையாட்டு கிராமம், போட்டி அமைப்புக்குழு அலுவலகம் உள்பட 20 இடங்களில் உள்ள கணக்குகளை தணிக்கை செய்வார்கள். இந்த தணிக்கையில் ஊழல் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் திட்டமிட்டப்படி 3 மாதத்துக்குள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப் பிப்பார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கைத் துறை சார்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications