For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாளையங்கோட்டை மத்திய‌ சிறையில் கைதிகள் திடீர் மோதல் : ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

பாளையங்கோட்ட: பாளையங்கோட்டை மத்திய‌ சிறையில் கைதிகள் திடீர் என்று மோதலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளிடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

மதுரையைச் சேர்ந்த ஆயுள்கைதி முத்துசாமி, கயத்தாறைச் சேர்ந்த ஆயுள்கைதி கந்தசாமி ஆகியோரிடையே திடீர் என்று தகராறு ஏற்பட்டது.

அப்போது கயத்தாறைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் அவர்களை சமாதானபடுத்த முயன்றார். அப்போது முத்துசாமி சங்கரபாண்டியனின் கையை கடித்தார். இதில் காயமடைந்த அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மோதிக் கொள்வதைத் தடுத்து நிறுத்துவதில் சிறை நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இதனால் ஏற்கனவே கைதிகள் ஒருவரை ஒருவர் சாப்பாடுத் தட்டுகளால் தாக்கிக் கொண்டதில் வல்லநாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கைதி அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X