புலிகளிடமிருந்து 110 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது-இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகளிடம் இருந்து 110 கிலோ தங்கத்தை ராணுவத்தினர் கைப்பற்றியதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்பி தயாஸ்ரீ ஜெயசேகரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ராணுவத்தினர் கைப்பற்றிய அத்தங்கத்தின் மதிப்பு ரூ 49 கோடி என்றும், தங்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினர் அவற்றை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார் என இலங்கை அரசு ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 500 கிலோவுக்கும் அதிகமாக தங்கம் எடுக்கப்பட்டதாகவும் அவை கோத்தபாய கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதாகவும் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா கூறியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications