காமக் கொடூரன் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு நவ. 16க்கு ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்: காமக் கொடூரன் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சராக இருந்தவர் தேவநாதன். கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்களிடம் நைச்சியமாகப் பேசி கருவறைக்குள் வைத்து அவர்களுடன் உடலுறவு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார் இவர்.
கோவிலுக்குள் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட தேவநாதனின் செயல்கள் அவரது வீடியோ செல்போன் மூலமாகவே வெளியுலகுக்குப் பரவியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு காஞ்சிபுரம் ஜே.எம்.முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. பின்பு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் காமக் கொடூரன் அர்ச்சகர் தேவநாதன் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டில் ஆஜரானார். வழக்கை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எத்திராஜ் உத்தரவிட்டார்.