பீகார் முதல் கட்ட தேர்தல்-அமைதியாக முடிந்தது வாக்குப் பதிவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று மிக பலத்த பாதுகாப்புடன், அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபைத் தொகுதிகளுக்கும் 6 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
தேர்தலையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.
முதல் கட்ட தேர்தலில் மொத்தமாக 1.07 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றனர். இவர்களில் 50.2 லட்சம் பெண் பெண்கள் ஆவர். மொத்தம் 10,454 வாக்குச் சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடைபெறும் மதுபானி, சுபால், கிஷன்கஞ்ச், அராரியா ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டிருந்தது. வெளியிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இன்று மாலை 5 மணியுடன்வாக்குப் பதிவு முடிவடைந்தது. பெரிய அளவில் கலவரம், வன்முறை இல்லை, அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 53 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட் மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தேர்தல் முறைகேடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதற்காக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுபானி மாவட்டத்தில் லாகா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
இந்திய-நேபாள எல்லைப் பகுதியில், சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications