பீகார் முதல் கட்ட தேர்தல்-அமைதியாக முடிந்தது வாக்குப் பதிவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று மிக பலத்த பாதுகாப்புடன், அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபைத் தொகுதிகளுக்கும் 6 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
தேர்தலையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.
முதல் கட்ட தேர்தலில் மொத்தமாக 1.07 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றனர். இவர்களில் 50.2 லட்சம் பெண் பெண்கள் ஆவர். மொத்தம் 10,454 வாக்குச் சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடைபெறும் மதுபானி, சுபால், கிஷன்கஞ்ச், அராரியா ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டிருந்தது. வெளியிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இன்று மாலை 5 மணியுடன்வாக்குப் பதிவு முடிவடைந்தது. பெரிய அளவில் கலவரம், வன்முறை இல்லை, அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 53 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட் மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தேர்தல் முறைகேடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதற்காக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுபானி மாவட்டத்தில் லாகா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
இந்திய-நேபாள எல்லைப் பகுதியில், சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications