For Daily Alerts
Just In
கேரளாவில் பள்ளிவாசல் மீது கல்வீசிய 14 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே பள்ளிவாசல் மீது கல்வீசிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலப்புழா அருகே உள்ளது மன்னஞ்சேரி. கடந்த இரு தினங்களுக்கு முன் இரவில் இங்குள்ள பள்ளிவாசல் மீது ஒரு கும்பல் சராமரியாக கற்களை வீசிவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து மன்னஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன், வினித், அனுப், சவீத் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Thursday, October 21, 2010, 13:48 [IST]