முல்லைப் பெரியாறு அணை-டிச. 17-19க்குப் பதில் 20 முதல் 22 வரை ஆய்வு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட கமிட்டியை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்துள்ளது. இந்தக் கமிட்டிக்கு ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக இருக்கிறார். இக்குழுவில் தமிழக அரசின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.லட்சுமணன் இடம் பெற்றுள்ளார்.
இந்த ஐந்து பேர் கொண்ட கமிட்டி டிசம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆய்வு செய்யும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் தமிழகத்தின் பக்கமிருந்தும், பின்னர் கேரளத்தின் பக்கமிருந்தும் ஆய்வு நடைபெறும். அணை பலமாக, பாதுகாப்பாக உள்ளதா என்பதை இந்த குழு ஆராய்ந்து உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை கொடுக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
தற்போது ஆய்வுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 17-19க்குப் பதில் 20 முதல் 22ம் தேதி வரை ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications