பெண்ணாகப் பிறந்ததால் சாய்னாவைப் பார்க்க மறுத்த பாட்டி

இதை சாய்னாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்துக் கிராமப்புறங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
இதில் சாய்னாவின் பாட்டியும் விதி விலக்கு அல்ல. சாய்னா பிறந்தபோது பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று அதிருப்தி அடைந்து குழந்தை முகத்தை ஒரு மாதம் வரை பார்க்காமல் பிடிவாதமாக இருந்தாராம் சாய்னாவின் பாட்டி.
சாய்னா ஹரியாணாவைச் சேர்ந்தவர். தனது பாட்டி குறித்து இந்தியா டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது பெற்றோருக்கு முதல் குழந்தை பெண். எனது அக்காவான அவரது பெயர் சந்திரன்ஷு. அவர் பிறந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிறந்தேன்.
2வதும் பெண்ணாகப் பிறந்து விட்டதே என்று அதிருப்தி அடைந்த எனது பாட்டி எனது முகத்தைக் கூடப் பார்க்கவில்லையாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை என் பக்கமே அவர் வரவில்லையாம். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை எனது பிறப்பு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
இப்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பின் வீரியத்தை என்னால் உணர முடிகிறது.
எனது பாட்டிதான் இப்படி. ஆனால் எனது பெற்றோர் எனக்கு மிகுந்த சுதந்திரத்தைக் கொடுத்துள்ளனர். எனது துறையில் நான் சிறந்து விளங்க அவர்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு மகத்தானது. அதற்காக அவர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் சாய்னா
சாய்னா பாட்டி 'கருத்தம்மா பாட்டி' லெவலுக்குப் போகாமல் விட்டாரே, அதுவரைக்கும் சந்தோஷம்தான்!












Click it and Unblock the Notifications