கர்நாடக சட்டசபையில் அமளி-15 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் அக்டோபர் 11ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட 15 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சட்டசபை கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.எல்.ஏக்கள் மேற்கொண்ட அமளி தொடர்பாக விசாரிக்க இந்தக் கமிட்டியை சபாநாயகர் போபய்யா நியமித்துள்ளார். நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாஜக எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் தலைமையிலான இந்தக் கமிட்டி, அக்டோபர் 28ம் தேதிக்குள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஹாரிஸ், சங்கமேஸ்வர், சுரேஷ் கெளடா, மஞ்சுநாத், காதர், அசோக், ரஹீம் கான், ககாசப் பாட்டீல், மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த புட்டராஜு, சமீர் அகமது கான், பந்தேப்பா கேஷம்பூர், கிருஷ்ணப்பா, பாலகிருஷ்ணா, பச்சே கெளடா, கே.ராஜு.












Click it and Unblock the Notifications