திருப்பூரில் இன்று விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. ஸ்டைலில் பிரமாண்ட கூட்டம் கூட்ட ஏற்பாடு

அதிமுக பொதுச் செயலாளர் ஒவ்வொரு நகரமாக போய் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதில் பல லட்சம் பேர் கூடி வருவதால் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது அதே பாணியில் விஜயகாந்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளார். முதல் கட்டமாக திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும், பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தொழிலாளர் நலனை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தநர். ஆனால் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து திருப்பூர் மில் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
அங்கு பிரமாண்ட ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர். ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜயகாந்த் இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். சூலூர் அருகே உள்ள ராவுத்தர் தோட்டத்தில் தங்குகிறார். மதியம் அங்கிருந்து திருப்பூர் புறப்பட்டு செல்கிறார். 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
விஜயகாந்தை வரவேற்று திருப்பூரில் வரவேற்பு வளைவுகள், பேனர்கள் கட்டப் பட்டுள்ளது. 30 இடங்களில் வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி, காங்கயம் ரோடு, ஆகிய பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
விஜயகாந்த் வருகையையொட்டி திருப்பூரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications