சென்னையில் ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு-காங்கிரஸார் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டதால், காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சிலையை சில விஷமிகள் அவமதித்திருந்தனர். இதைப் பார்த்த காங்கிரஸார் கோபமடைந்தனர். உடனடியாக அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிலையை அவமதித்த விஷமிகளை உடனடியாக கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் அசோக் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications