சென்னையில் மாநாடு நடத்தும் திட்டமில்லை-காங்.
டெல்லி: கூட்டணிக் கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால் சென்னை மற்றும் கொல்கத்தாவில் மாநாடு நடத்த தயங்குகிறதாம் காங்கிரஸ்.
தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் சட்டசபைத் தேர்தல்கள் வரவுள்ளன. இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் மாநாடு நடத்தும் காங்கிரஸ் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக அகில இந்திய அளவிலான மாநாட்டை அது சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்தலாம் எனக் கருதப்படுகிறது.டிசம்பரில் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் தெரிகிறது.
ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் தேர்தல் வரவுள்ள நிலையில் மாநாடு நடத்துவது பொருத்தமானதுதான். ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு (திமுக, திரினமூல் காங்கிரஸ்) தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அது அமையலாம் என்பதால் அதை நாங்கள் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாக வட இந்தியாவில், குறிப்பாக டெல்லி அல்லது ஜெய்ப்பூரில் இந்த மாநாடு நடைபெற வாய்ப்புள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications